Sunday 2 February 2014

தொண்டைமானும் வேணாடாரும்

தென்கரை நாட்டில் ஆறு கீழ்கரை ஆறு ஊர்களை ஆளும் உரிமையை பூசன் குல தொண்டைமானுக்கு அளித்து மன்னர் ஆக்கினார் வேணாடார். தொண்டைமானுக்கு வேணாடார் தன் மகளை திருமணம் செய்து கொடுத்து சீதனமாக இவைகளை வழங்கி இருக்கலாம்.மூன்று திருமணங்கள் வேணாடார் குடும்பத்துக்கும் தொண்டைமான் குடும்பத்திற்க்கும் நிகழ்ந்து உள்ளது.தொண்டைமானின் அரண்மனை சின்னக்காம்பட்டியில் உள்ளது. தொண்டைமான் மரபில் திருமலை தொண்டைமான்,ரகுநாத தொண்டைமான்,நல்லைய தொண்டைமான்,குமாரு தொண்டைமான்,அச்சுதராய தொண்டைமான்,செம்புமுனை ,நல்லதம்பி தொண்டைமான்,மன்னர் சிறை விடுராய தொண்டைமான்,மாந்தியப்ப தொண்டைமான்,சோழியப்ப தொண்டைமான்,சின்னதம்பி தொண்டைமான் ஆகிய பெயரிகள் அறிய படுகிறது.